Saturday, January 5, 2008

என்னவளே!...

என்னவளே!...

என் கனவினில் வந்தாய்
தூக்கம் தொலைத்தேன்

என் நினைவினில் வந்தாய்
நிதானம் இழந்தேன்

எப்போது என் எதிரில் வருவாய்
என எதிர்பாத்திருந்தேன்

வந்தது

உன்னிடமிருந்துஅந்த
தொலைபேசி அழைப்பு
நீதானா என நிதானிப்பதற்குள்
துண்டிக்கப்பட்டது அந்த இணைப்பு

நீ துண்டித்தது தொலைபேசி இணைப்பைஅல்ல
நம் தொலைவின் தூரத்தை...

அழைத்தாய்...

சந்தித்தோம்...

பேசினோம்.....

ஏனோ தெரியவில்லை
உடனே சென்றுவிட்டாய்

ஆனால்...

சென்றது நீ மட்டும்தான்
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே...

இனியும் ஏன்

நான் - நீ
என்றஒருமை வார்த்தைகள்
வேண்டாம்.. வேண்டாம்..

இனி

நான் - நீ
என்பதை மறப்போம்...

நாம் - நாம்
என்றே இருப்போம்....

No comments: